ராஜிதவுக்கு சிகிச்சை அளித்தவர்களிடம் வாக்கு மூலம்!

80 ed
80 ed

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு சிசிக்சை அளித்த விசேட வைத்திய நிபுணரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்த விசேட வைத்திய நிபுணரிடம் முன்னாள் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவைக் காண்பித்தே இவ்வாறு வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று (26) நள்ளிரவு வரை இந்த விசேட வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.