இராஜகிரிய போதைப்பொருள் விவகாரம்: விசாரணைகள் சிசிடியிடம் ஒப்படைப்பு

download 24
download 24

இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியில் சுற்றிவளைப்பொன்றின் போது போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் காவல்துறை அதிகாரியொருவரை சிற்றுந்தினால் விபத்துக்குள்ளாக்கி தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சிற்றுந்து நேற்று தலங்கம காவல்துறையினரால்  கண்டுப்பிடிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், குறித்த சிற்றுந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பிரதான சந்தேக நபரை தேடி தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.