‘சன்ஷைன் சுத்தா’ எனப்படும் அமில ஹெட்டிஹேவாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘மிதிகம லசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லசந்த விக்ரமசேகர கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் துபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் ருவன் சிந்தகவின் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்த பிரதானி என காவல்துறை தெரிவித்துள்ளது.