தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி ; ஒருவர் பலி

201905150714471783 AC burst causes fire three dead SECVPF

முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (24) திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மஹவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.