மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்
சுன்னாகம், மல்லாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்த 25-28 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டனர்.
கடந்த முதலாம் திகதி மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்தும் மானிப்பாய் லவ் ஒழுங்கையைச் சேர்ந்த இந்திரன் நிரோஷ்குமார் (வயது-27) என்பவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியமைக்காக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்