நாட்டில் நேற்றைய நாளில், 148,306 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 62,385 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 22,800 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2,025 பேருக்கு அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியும், 25,530 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
மொடர்னா இரண்டாம் தடுப்பூசியை 42 பேரும் , முதலாம் தடுப்பூசியை 78 பேரும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, 943 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 24,023 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.