மரக்குற்றி விழுந்ததில் நபர் ஒருவர் பலி

death 1
death 1

கட்டுகஸ்தோட்டை பகுதியில் மரக்குற்றி விழுந்ததில் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை இறக்கும் போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே விழுந்ததுள்ளன.

இதன்போது, கீழே இருந்த ஊழியர் மீது மரக்குற்றிகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.