சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

kaithu
kaithu

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி அவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளனர்

இதில் கைது செய்தவரை இன்று புதன்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.