சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கை விரைவில்

cigarettes

சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான அனுமதிப்பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நேற்று (29) சுகாதார அமைச்சில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஆணையத்தின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்ஷ மற்றும் அதன் பணிப்பாளர் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை சிகரெட்டின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் போன்றவற்றில் கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்டுவரவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.