கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு நாளையதினம் விலத்திக்கொள்ளப்படவுள்ள நிலையில் வவுனியா நகரில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று (30) காலை
முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் இராணுவம், நகரசபையினருடன் இணைந்து வவுனியா பேருந்து நிலையம் மற்றும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள், வியாபார நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், நகர வர்த்தக நிலைய முன்றல், பிரதான வீதிகள், நடைபாதைகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது