ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சந்திக்க இலங்கை வருகின்றார் சுப்பிரமணியம் சுவாமி!

subramanian swamy
subramanian swamy

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் மிலிந்த மொரகொட, பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியைச்  சந்தித்து பேச்சுகளை நடத்தியுள்ளார்.

இதனை சுப்பிரமணியம் சுவாமி தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“நாங்கள் காத்திரமான நட்பு ரீதியிலான பேச்சுகளை மேற்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ள அவர், “நான் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு எனது அருமை நண்பர் ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சந்திக்கவுள்ளேன். அனைத்து விபரங்களும் இறுதியானதும் ருவிட்டரில் அது தொடர்பில் தகவல்களை வெளியிடுவேன்” எனவும் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.