இந்தியா – இலங்கை கடற்படையினருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இணையவழி ஊடாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, இந்தியா – இலங்கை கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான எல்லை கண்காணிப்புகளை அதிகரித்தல் மற்றும் தகவல் பரிமாற்றங்களை வலுப்படுத்தல் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடல் பிராந்தியத்தின் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.