முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தை பெற்று தருமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்றைய தினம் (27) பயணம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பில் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.
எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்களது சேவையை விரிவுபடுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், இதற்காக வெளிநாடுகளுக்கும் முன்பள்ளி அசிரியர்களை அனுப்பி நவீன பயிற்சிகள் வழங்கப்படும். இதுவே எனது திட்டமாக உள்ளது என்றும் கூறினார்.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்கள், தாம் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆயினும் இதுவரை தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. எனவே அதனை பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.