மன்னாரில் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

kaithu
kaithu

மன்னார் – முருங்கன் பகுதியில் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 30,42 ஆகிய வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்