வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

1633188830 death body 02
1633188830 death body 02

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவற்துறை பிரிவுக்குட்பட்ட 38 ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் இருந்து இன்று (02) மாலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட சடலம் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம் சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெல்லாவெளிகாவற்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (01) மாலை வீட்டில் இருந்து வயலுக்கு போனவர் இன்றும் (02) வீடு திரும்பாத நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

38ம் கிராமம் வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள வயல் வடிகான் நீருக்குள் துவிச்சக்கரவண்டியும் சடலமும் கிடப்பதனை கண்ட அவ்வழியாக சென்ற ஆடு மேய்க்கின்றவர்களால் கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த சடலம் தொடர்பில் வெல்லாவெளி காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.