பின்தங்கிய கிராமத்தில் தடுப்பூசியை பெற மக்கள் ஆர்வம்!

IMG 1902 1
IMG 1902 1

வவுனியா நவ்வி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசியை பெற மக்கள் ஆர்வம் செலுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது. நவ்வி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி என். காந்தீபன் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இடம்பெற்றிருந்ததுடன் வைத்தியசாலையின் மருந்தாளர் சூ. நிருபன் மற்றும் மருத்துவ மாதுக்கள் இலங்கை செஞ்சிலுவை சங்க தொண்டர்கள், விமான படையினரும் குறித்த தடுப்பூசி ஏற்றும் திட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதன்போது 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் அதிகளவில் தடுப்பூசியைபெற வருகை தந்திருந்ததுடன் ஏனைய வயதுப்பிரிவினரும் தடுப்பூசியை பெற்றிருந்தனர்.