சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பிலும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் நாளை மீண்டும் ஒன்று கூடவுள்ளனர்.
மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பேசப்பட்ட விடயங்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.