மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

2 3
2 3

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை, நாளை காலை 8.30 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.