இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வணிக வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்க பெறும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கான எழுத்துமூல ஆவணங்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய தினம் நிதி கிடைக்கும் பட்சத்தில் நாளை மறுதினத்திற்குள் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை விடுவிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.