இரசாயன உரத்துக்கான தடை தொடர்பில் மனு தாக்கல்

seedcompost011
seedcompost011

இரசாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் அதன் செயலாளர் பீ. ஹெரிசன் ஆகியோரால் இன்று (06) முற்பகல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது