ஆசிரியர்கள், அதிபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதுவரையில் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இவ்வாறான பிரத்தியேக உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்திகளையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.