வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒரு சட்டமும் இந்து ஆலயங்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது இந்து ஆலயங்களுக்கு ஏன் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது ? என்று சிவசேனாவின் இணைப்பாளர் தமிழ் திரு மாதவன் தெரிவித்துள்ளார். இன்று (07) வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ,
இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். மதுபான நிலையங்கள், போக்குவரத்து, அரச திணைக்களம், அரசியல்வாதிகளினால் நடாத்தப்படும் கூட்டங்கள் இதுபோன்ற இடங்களில் இருபதிற்கும் மேற்பட்டவகள் கலந்துகொள்கின்றார்கள். ஆனால் ஆலயங்களுக்கு இவ்வளவு ஒரு கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன் என்பதுதான் எங்களுடைய கேள்வியாக இருக்கின்றது என்று மேலும் தெரிவித்துள்ளார் .