சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

173CE731 AB21 45CD 9C35 D7E1EEDB5773
173CE731 AB21 45CD 9C35 D7E1EEDB5773

சிறுவர்களை பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் குறித்த வர்த்தகம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.