லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடியுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
பம்பலப்பிட்டியை சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.