முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, கையூட்டல் ஆணைக்குழுவின் அழைப்பின்பேரில் திருக்குமரன் நடேசன் அவ்வாணைக் குழுவில் இன்றுக்காலை முன்னிலையானார்.