மன்னாரில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

201806081825332202 dharna struggle demanding to solve the drinki 720x450 1

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள், இன்று காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்த இக்கட்டான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவையை கருத்தில் கொண்டு வழங்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள், பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.