வவுனியாவில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

kaithu
kaithu

வவுனியா நகரில் 03 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 04 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அக்குரணை, மஹவ, கெக்கிராவ பிரதேசங்களை சேர்ந்த 29, 30 மற்றும் 53 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.