ஹாலிஎல, ஜகுல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து விழுந்து இருவர் மரணமடைந்துள்ளனர்.
43, 25 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் எதற்காக பாறையின் மீது ஏறினர் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.