ஆயுதங்கள் சிலவற்றுடன் கைதான மாகந்துர மதுஷின் உதவியாளருக்கு விளக்கமறியல்

vilakam
vilakam

ஆயுதங்கள் சிலவற்றுடன் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஷின் பிரதான உதவியாளரான பொடி பெ(ட்)டி என்பவர் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மத்துகம நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம – மீகம பகுதியில் குறித்த சந்தேக நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இதன்போது துப்பாக்கி ஒன்றும், 9 மில்லிமீற்றர் ரக 5 தோட்டாக்களும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் நியோமால் ரங்கஜீவ உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது பிலியந்தலை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் குறித்த சந்தேக நபர் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.