மீரிஹான கிம்புலாவல கழிவுநீரோடையிலிருந்து 40 வயது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
பிரதேச மக்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, மீரிஹான காவல்துறையினர் கடற்படையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர்.
இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம், களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மீரிஹான காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.