மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 இரண்டாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை(11) முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று தமக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.