எதிர்வரும் புதன்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் இடம்பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.