பாடப் புத்தகங்களை விரைவாக விநியோகிக்க பணிப்பு

ranjith siyampalapittiya
ranjith siyampalapittiya

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான பணிகள் ஜனவரி மாதம் 3ஆம் திகதி நிறைவு செய்யப்படவிருப்பதாக தெரிவித்தார்.

வலய மட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தக்கங்கள் தற்சமயம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.