பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

mahintha
mahintha

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் வருகை தந்த ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக பிரதமர் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்ததொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.