காணிதகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு

download 18
download 18

கிளிநொச்சி காவற்துறை பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் 11.10.2021 இன்றையதினம்    காணி பிரச்சனை  காரணமாக  இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன்  காரணமாக  மாமனாரின்  கையை  மருமகன்  கொடூரமாக வெட்டி ஆற்றில்  வீசிய சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம்  அறிந்த உரவினர்களால் காயமடைந்தவர்  உடனடியாக  தருமபுரம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர்  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். 


இச்சம்பவம்  தொடர்பாக கிளிநொச்சி  காவற்துறையினர் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர். அச்சம்பவத்தில்  கையை இழந்தவர் 64 வயதுடையவர் ரி. கருணாமூர்த்தி என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.