போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது

kaithu

ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

6 இலட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய  போதை மாத்திரைகளை 9 ஆயிரத்து 60 மாத்திரைகள் சந்தேக நபர்களிடம் கைப்பற்றட்டது என்றும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்
ஏழாலையைச் சேர்ந்த 38 வயது நபரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மூத்த காவற்துறை அத்தியட்சகரின் கீழான தலைமை காவற்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.