மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தின் பிரதான செயலாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணினி கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.