வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) மாலை 6.40 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரம் புதிய சாளம்பைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பின்புறமாக பயணித்த பிளசர் ரக மோட்டார் சைக்கிள் உழவியந்திரத்தை முந்தி செல்ல முற்பட்ட போது உழவியந்திரத்தின் பின் பகுதியிலுள்ள கலப்பையில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிக்குளத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.