நாட்டில் மேலும் 166 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 513 பேருக்குக் கொவிட்-19 தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 679 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 528,414 ஆக அதிகரித்துள்ளது.