இரு குழுக்களுக்கிடையில் மோதல்; நால்வர் படுகாயம்

attack 2 720x375 1
attack 2 720x375 1

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காவத்தை, வட்டாபொத்த தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

வட்டாபொத்த தோட்டத்துக்குள் புகுந்த சிலர் ஓட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியதுடன், அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த நபர்களையும் தாக்கிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.