ஜனாதிபதிக்கு பாதுகாப்பு விடயத்தில் போதிய தெளிவில்லை என்பது அவரது செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதானிகளாக இராணுவத்தின் இருவரை நியமித்துவிட்டு, இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பதனை அவர் மறுத்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பை ஓரிரு மாதங்களில் பலப்படுத்த முடியாது என்பதே உண்மை.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“இன்று ராஜித சேனாரத்ன அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுதான் ராஜபக்ஷக்களின் அரசியல் கலாசாரமாக இருந்து வருகிறது.
இவர்களைப் பற்றி நாம் நன்றாக அறிவோம். இதனை நாம் ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் கூறி வந்தோம்.
எனினும் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.
இது வெறும் ஆரம்பம் மட்டும்தான். இன்றும் ஒரு வருடம் சென்ற பின்னர், மக்கள் தாங்கள் செய்த பிழைகளை உணரும் அளவுக்கு அவர்கள் செயற்படுவார்கள்” என்றும் தெரிவித்தார்.