கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

nellai murder
nellai murder

மெதிரிகிரிய – பெரகும்புர பிரதேசத்தில் தனிப்பட்ட மோதலொன்றை தடுக்கச் சென்ற 37 வயதான நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

தனது வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் பணி நிறைவடைந்து வீடு செல்லும்போது, இருவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலைத் தடுப்பதற்காகக் குறித்த நபர் முயற்சித்துள்ளார்.

அதன்போதே, அவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் அங்கிருந்த பெண்ணொருவரால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நபரின் மனைவி, கடந்த 7 நாட்களுக்கு முன்னரே குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, நேற்றிரவு குறித்த பெண்ணின் வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.