வவுனியா மாவட்டத்தில் 20 – 29 வயதிற்கு இடைப்பட்ட 21 ஆயிரத்து 291 இளைஞர், யுவதிகள் கொவிட் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளிலிருந்து 14.10.2021 வரையான காலப்பகுதியில் 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களில் 21,291 இளைஞர், யுவதிகள் முதலாவது டோஸ் கொவிட் -19 தடுப்பூசியினையும், 5,350 இளைஞர், யுவதிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். மேலும், வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83,711 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியினையும், 66,489 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியினையும் பெற்றுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.