மீனவர்கள் – கடற்படையினருக்கான அறிவித்தல்!

1617935557 Fisherman 2
1617935557 Fisherman 2

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் கடற்படையினரும்,  மீனவ சமூகமும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.