ஐ.தே.க இன் நாடாளுமன்ற குழு ஜனவரியில் கூடுகிறது

akila
akila

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு ஜனவரி 2ம் திகதி கூடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் ஜனவரி மூன்றாம் திகதி கூடியதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தல் மார்ச் மாதமளவில் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுமுறைக்காக இந்தியா சென்றிருக்கும் நிலையில் நாடு திரும்பியதன் பின்னரே புதிய செயற்குழுக் கூட்டத் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டார்.