வாகன இலக்கத்தகடுகள் மற்றும் உரிய ஆவணங்களை விரைவுத் தபால் அல்லது விரைவு குரியர் சேவையின் (Express Courier Service) ஊடாக வாகன உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தபால் முறையில் காணப்படும் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுள்ள காரணத்தினால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.