கொழும்பில் குறைவடைந்த கொரோனா மரணங்கள்

corona death28 1
corona death28 1

கொழும்பு மாநகரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் எவரும் உயிரிழக்கவில்லை.

இந்தத் தகவலை கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொழும்பில் ஐந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம்காணப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக எவரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.