நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும் இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.