வன்முறை சம்பவங்களுக்கு எதிராக வட்டுக்கோட்டை மக்கள் போராட்டம்

20211022 134958
20211022 134958

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இன்றையதினம் (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் ஒருவரது அவயம் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பக்கத்தினைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆகவே தாக்குதல் நடாத்திய மிகுதிப்பேரையும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.