கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

kaithu
kaithu

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று(22), முல்லைத்தீவு – உடப்புக்குளம் பகுதியில் வைத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஸ்வமடு பகுதியைச்சேர்ந்த 30 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்றையதினம் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.